படிக்கட்டுகள் அமைக்கப்படுமா?

Update: 2022-08-12 14:08 GMT

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சேட்டுப்பேட்டை பகுதியில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் இருந்து சற்று உயரமாக உள்ள நிழற்குடைக்காக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் சாலை விரிவாக்கம் செய்யும்போது அகற்றப்பட்டன. ஆனால் இன்னும் படிக்கட்டுகள் போடப்படாதால் பயணிகள் மழைக்காக நிழற்குடைக்குள் ஒதுங்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக படிக்கட்டுகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்