புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-08-12 12:52 GMT

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 3-வது தெருவில் பயன்பாடு இல்லாத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இரும்பு கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாகவும், அதன் அருகே தினமும் குழந்தைகள் விளையாடுவதாகவும் முதலியர்பட்டியை சேர்ந்த வாசகர் அம்ஜத் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக அந்த இரும்பு கம்பம் அகற்றப்பட்டு விட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்