புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-08-12 12:37 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், அங்குள்ள காளியப்பர் தெருவில் புதிதாக சாலை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாகவும் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக அங்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்