பயன்படாத பொதுகழிப்பிடம்

Update: 2022-08-11 17:24 GMT

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி தேவேந்திரகுல வேளாளர் தெருவில் பொது கழிப்பிடம் உள்ளது. செடி, கொடிகள் வளர்ந்து புதருக்குள் அமைந்துள்ள இந்த கழிவறை பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிப்பறையை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?

-சக்திவேல், நாமக்கல்.

மேலும் செய்திகள்