தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் மாற்று திறனாளிகளுக்கு என கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட நாளிலிருந்து பல ஆண்டுகளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டுக்கும் கொண்டு வர படவில்லை. அதற்கு தண்ணீரும் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-ராஜேஷ், பொ.மல்லாபுரம், தர்மபுரி.