மரக்கிளை அகற்றப்படுமா?

Update: 2022-08-11 15:19 GMT


தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே பெருமாள்கோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே மரக்கிளைகள் படர்ந்து பள்ளிக்குள் செல்கிறது. இதனால் விஷ பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆடுதுறை

மேலும் செய்திகள்