தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் மின்வெட்டும் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் இரவில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசுத்தொல்லையால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கும்பகோணம் நகரில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கும்பகோணம்.