பொதுமக்கள் அவதி

Update: 2022-08-11 13:34 GMT

ஆறுமுகநேரி மெயின் பஜார் நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வீணாக சென்றது. தற்போது 15 தினங்களுக்கு முன்பு அந்த உடைந்த குழாயை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தோண்டி பழுது பார்த்தனர். ஆனால் பழுது பார்த்த பின்பு அந்த குழியை முறையாக மூடாமல் கல்லையும், மண்ணையும் ரோட்டில் போட்டுச் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து ஏற்படுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, இதை உடனடியாக சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்