சுகாதார வளாக கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-11 13:26 GMT
நாகை மாவட்டம் திருமருகல் பகுதி திருச்செங்காட்டங்குடியில் உள்ள சுகாதார வளாகம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சுகாதார வளாக கட்டிட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், கான்கிரீட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. அதுமட்டுமின்றி சுகாதார வளாகம் முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக சுகாதார வளாகம் மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சுகாதார வளாக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்