ஆபத்தான அங்கன்வாடி மைய கட்டிடம்

Update: 2022-08-11 12:44 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கே.புதுப்பட்டி கடை வீதியில் உள்ள போலீஸ் நிலையத்தை அடுத்து முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப்பள்ளி மிகவும் பாழடைத்ததால் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி மாற்றப்பட்டது. தற்போது அந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மோசமான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் குழந்தைகள் இருக்கும்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்