பன்றிகள் தொல்லை

Update: 2022-08-11 10:49 GMT
கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்க கூடிய பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இவ்வாறு சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்