நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் மீதமான உணவு பொருட்களை வீசி செல்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களை தூக்கி எறிகின்றனர். இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உணவு பொருட்களை வீசுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.