சுகாதார சீர்கேடு

Update: 2022-08-10 16:42 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் மாதா கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து வையனை செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையோரத்தில் அடிக்கடி இறந்துபோன பன்றியை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும்போது துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஞானசேகரன், காந்திபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்