திறந்த குழியால் ஆபத்து

Update: 2022-08-10 13:43 GMT

திறந்த குழியால் ஆபத்து

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரம் அருகே சாலையோரத்தில் குடிநீர் குழாய்க்கான வால்வு உள்ளது. ரோட்டில் இருந்து சுமார் 3 அடி குழிக்குள் அமைந்துள்ள இந்த வால்வின் மேல் பகுதியில் மூடி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ரோட்டின் ஓரத்தில் திறந்த நிலையில் இருக்கும் இந்த குழியால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வாகனங்கள் அதிகமாக செல்லும் நேரத்தில் வாகன ஓட்டிகள் இந்த குழியில் விழக்கூடிய ஆபத்து உள்ளது. இதேபோல் இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சற்று கவனம் தவறினாலும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இங்கு மூடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.

அனிதா,எம்.எஸ்.நகர்.

98417 49158

மேலும் செய்திகள்