சென்னை, சந்தோஷபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தெருவில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒரே இடத்தில் கூடி, தெருவில் நடமாடுபவர்களை கடிக்க வருகிறது. இதனால் இந்த பகுயில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?