மதுரை மாவட்டம் செல்லூர் சுயராஜ்யபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பெற்றோர் அச்சத்துடனே குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.