பயணியர் நிழற்குடை கட்டப்படுமா?

Update: 2022-08-09 16:38 GMT
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து திருச்சிக்கும், தொழுதூர், லெப்பைக்குடிகாடு, வேப்பூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிக்கும் அரசு ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் தினந்தோறும் சென்று வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லை. பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் மழை, வெயில் இருகாலங்களிலும் திறந்தவெளியில் காத்திருந்து பஸ் ஏறிசெல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி பயணியர் நிழற்குடையை நகராட்சி நிர்வாகம் உடனே அமைத்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்