ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2022-08-09 16:34 GMT
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து அரணாரை மற்றும் செஞ்சேரி எல்லை வரை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை அகலப்படுத்தப்பட்டு மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெப்பக்குள வடக்குகரையில் (பழையசந்தைபேட்டை) தொடங்கி தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி அருகே உள்ள சாரணர் இயக்க வளாகம் வரையில் இரவு நேரங்களில் அதிக இருட்டாக உள்ளதால், வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்துசெல்வல கடினமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்களில் சென்றுவரும் பொதுமக்களின் வசதிக்காக மையத்தடுப்புகளில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகளை நகராட்சி நிர்வாகம் அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்