சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-08-09 13:44 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மலையடிப்பட்டி கிராமம் ஆவாரம்பட்டி ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டுசெல்வதற்கு சரியான பாதைவசதியோ, சாலை வசதியோ கிடையாது. மேலும் ஈமசடங்குகள் செய்ய தண்ணீர் மற்றும் மின்சார வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்ய வருபவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே‌ சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி