அவசர சிகிச்சை பிரிவை மாற்றவேண்டும்

Update: 2022-08-09 13:37 GMT

 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தரைதளத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த அவசர சிகிச்சை பிரிவு மாடிக்கு மாற்றப்பட்டு உள்ளதால் விபத்து ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மேலே கொண்டு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவசர சிகிச்சை பிரிவை முன்பு இருந்ததுபோல் தரைதளத்திற்கு மாற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்