நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், பெரியகரசப்பானையம் 4 ரோட்டில் இருந்து கருப்பண்ணார் கோவில் வழியாக கட்டமராபாளையம் செல்லும் வழியில் உள்ள தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. சாலை முழுவதும் தேங்காய் மட்டை நார் கிடப்பதால் முன்னாள் செல்லும் வாகனங்களால் துகள் பறந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகத்திலும் கண்களிலும் படுவதால் வாகன ஓட்டிகள் அவதிபடும் நிலை உள்ளது எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்க்கை எடுக்க வேண்டும்,
-பரமசிவம், ஓலப்பாலையம்.