தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை கடித்து விடுகின்றன. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்களை விரட்டிச்சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தெக்கூர்.