துணை சுகாதார நிலையம் திறக்கப்படுமா?

Update: 2022-08-08 13:08 GMT
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் சி.கீரனூர் ஊராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, அந்த துணை சுகாதார நிலையம் முற்றிலும் பாழடைந்துள்ளது. இதனால் அதனை பயன்படுத்த முடியாமல் மூடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், அந்த துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், 24 மணி நேரமும் செவிலியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி