அரியலூர் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகனம் ஓட்டி செல்பவர்கள் அதன் மீது மோதி விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு குறைத்துக்கொண்டிருப்பதால் பலர் தூங்க முடிவதில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.