ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சி அலுவலகம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எனவே அலுவலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.