ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு உட்பட்ட காட்டு பரமக்குடி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்தும் இடத்தில் குறைந்த பணியாட்களே உள்ளனர். இதனால் இங்கு வருவோர் நீண்ட நேரம் காத்திருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் ஆட்கள் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.