சென்னை டி.பி. சத்திரம் செனாய் நகர் 19-வது குறுக்கு தெருவில் உள்ள பெயர் பலகை உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் கூரியர் கொடுக்க வருபவர்கள் மற்றும் தெருவிற்கு புதிதாக குடிவருபவர்கள் தெருவை அடையாளம் கண்டுகொள்ள சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் தெருவிற்கு புதிய பெயர் பலகை கிடைக்க வழி செய்ய வேண்டும்.