சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி சத்திரம், மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த சாலையை கடக்க முயற்சி செய்யும் போது அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. மேலும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதியில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.