பயன்படாத விளையாட்டு மைதானம்

Update: 2022-08-02 15:51 GMT

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வடுகமுனியப்பன் பாளையம் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் தார்சாலையில் விளையாடும் நிலை உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி செடி, கொடிகளை அகற்றி மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேந்திரன், நாமக்கல்.

மேலும் செய்திகள்