நாமக்கல் மாவட்டம் மோகனூர் பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் கூட்டுறவு சங்க மருந்து கடை உள்ளது. அந்த கடை முன்பு வெளியூர் செல்பவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தியும், அறிவுப்பு பலகை வைத்தும், அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள், பஸ் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் மருந்து கடை முன் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுசாமி- மோகனூர்