ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் தெருக்களில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த வழியில் செல்லும் பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊரை சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்