நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில் அலுவலக தரைதளத்தில் டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டது. தற்போது டைல்ஸ் கற்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அலுவலகத்துக்கு வரும் முதியோர்கள் உடைந்த டைல்ஸ் கற்களில் நடக்கும்போது அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உடைந்த டைல்ஸ் கற்களை அகற்றிவிட்டு புதிய கற்களை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகநாதன், எஸ்.வாழவந்தி, நாமக்கல்.