நாய்கள் தொல்லை

Update: 2022-07-30 16:41 GMT

விருதுநகர் மாவட்டம் மேலதெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த பகுதியில் பள்ளி, ஆஸ்பத்திரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள் அதிகம் வந்து செல்லும் இந்த வழித்தடத்தில் நாய்கள் சுற்றித்திரிவதால் சாலையில் நடக்க அவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனஓட்டிகளை துரத்துவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்