பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்

Update: 2022-07-30 14:37 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலை, முத்தையா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் தனியாக நடந்து செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் தனியாக வீட்டை விட்டு வெளியேற அச்சப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் செல்வதால், அவர்கள் அச்சத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்