நாய்கள் தொல்லை

Update: 2022-07-30 14:00 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை தங்கப்பாநகர் சாலையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் பகலில் சாலையின் நடுவே படுத்து தூங்குவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் குறுக்கே நாய்கள் பாய்வதால் விபத்து ஏற்படுகிறது. அதோடு நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்கின்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சமடைகின்றனர். எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்