மீன்பண்ணையால் துர்நாற்றம்
பல்லடம் பெத்தாம்பாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு பண்ணை செயல்படுகிறது. மீன்களுக்கு உணவாக அழுகியமுட்டை, கோழிகளின் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள பல்லடம் துணை மின் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர் மற்றும் அதிகாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதால் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
ர.மணிகண்டன், பல்லடம்.95784-41037