நம்பியூர் கோசணம் அருகே கொளப்பலூர்-நம்பியூர் சாலையில் செல்லிபாளையம் என்ற இடம் உள்ளது. இங்கு நம்பியூர், மூணாம்பள்ளி ஊருக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் பலகை வைக்கப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்க பணி நடந்தபோது இந்த பலகை அகற்றப்பட்டது. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வழிமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே பெயர்த்து எடுத்த வழிகாட்டி பலகையை மீண்டும் நெடுஞ்சாலையோரம் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.