பயன்படுத்த முடியாத நிலையில் அரசு பள்ளி கழிவறை

Update: 2022-07-29 12:23 GMT
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, மணவாள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் தெருவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குடவாசல் தாலுகாவை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிவறை உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறையை பராமரித்து மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

-,


மேலும் செய்திகள்