அகற்றப்படாத தரைப்பாலம்

Update: 2022-07-28 13:33 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கருப்பம்பட்டிக்கும், தங்கநகருக்கும் இடையேயான வண்ணாந்துறை மேம்பால பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தும் தற்காலிகமாக போடப்பட்ட தரைப்பாலம் அகற்றப்படாமல் உள்ளது. தற்சமயம் நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், தரைப்பாலத்தில் உள்ள குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல் வெளிகளில் புகுந்து விவசாயத்தை பாதிப்பதுடன் மண் அரிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தரைப்பாலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்