புதிய கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2022-07-28 12:46 GMT
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூங்கிலக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளை பெற்று வந்தனர். இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இதன் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு சேதமடைந்துள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்