நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய நால்ரோடு மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் இறப்பு, பிறந்தநாள் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நீண்ட நாட்கள் ஆகியும் அந்த பேனர்கள் எடுக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக்கம், பள்ளிபாளையம், நாமக்கல்.