அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் ஒரே ஒரு மருத்துவர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பணியில் உள்ளார். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.