ஈரோடு மாமரத்துப்பாளையம் தீபம் நகரில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. சக்திதேவி நகருக்கு வரும் குப்பை வண்டிகள் இங்கு வருவது இல்லை. இதனால் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. இதன் காரணமாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே தீபம் நகருக்கு குப்பை வண்டிகள் வரவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.