மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் 7 -வது வார்டு பால் பண்ணை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச்சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலையின் குறுக்கே அடிக்கடி பாய்வதால் விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும் பெண்கள், குழந்தைகள், மற்றும் பொது மக்கள் இரவு 7 மணிக்கு மேல் இந்த சாலையில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இந்த சாலையில் பள்ளியும் இயங்கி வருவதால் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.