அபாய நிலையில் அங்கன்வாடி
திருப்பூர் அனுப்பர்பாளையம், சத்தியநகரில் மின் மயானம் அருகே உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதில் ஜன்னல் உடைந்து விழுந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு கழிவறை வசதி இல்லை. இங்குள்ள மின்கம்பிகளை திருடிச்சென்றுவிட்டனர். இதனால் மின்சார வசதியும் இல்லை.மேலும் இந்த பால்வாடியில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் குழந்தைகள் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கிறார்கள்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பிரியா, அனுப்பர்பாளையம்.
76672 32842