பாதியில் நிற்கும் சுற்றுச்சுவர் பணி

Update: 2023-09-13 17:28 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட 6 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. பின்பு கிடப்பில் போடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டது. இந்த பள்ளி சற்று ஒதுக்குப்புறமாக தனியாக இருப்பதால் நள்ளிரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. எனவே தாமதம் இன்றி சுற்றுச்சுவர் கட்ட மாணவர்களின் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் கோரிக்கை விடுகின்றனர்.

-பழனி, மல்லப்பாடி.

மேலும் செய்திகள்