விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பெரியகடை வீதி, கவிமணி தேசியவிநாயகர் வடக்குதெரு, ஆஸ்பத்திரி அருகில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.