கீரப்பாளையம் ஒன்றியம் தென்பாதி கிராமத்தில் உள்ள வீராணம் ஏரிக்கரை பகுதியில் பயணிகள் நிழற்குடை இருந்தது. மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் இந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.