கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் கடிகாரம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த கடிகாரம் பழுதடைந்தது. அதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த கடிகாரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.