பயணிகள் அவதி

Update: 2023-09-13 08:50 GMT

தமிழக-கேரள எல்லையில் முக்கிய இடமாக களியக்காவிளை அமைந்துள்ளது. இங்கு தினமும் பல்வேறு தேவைகளுக்காக இரு மாநில மக்களும் பஸ்சில் வந்து செல்கின்றனர். இதனால் 24 மணிநேரமும் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திறந்தவெளி பஸ்நிலையமாக காணப்படும் இங்கு புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் பஸ்சிற்காக மழை, வெயில் என்றும் பாராமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிய பஸ்நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்